இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் 27.03.2025 அன்று பெய்த அடை மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பனாமுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெம்பனை, ஒமல்பே, கொடவெல, தாபனே தொரபனே ஆகிய பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அடை மழை காரணமாக ம்பிலிப்பிட்டிய – தொரபனே வீதியின் இருபுறமும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
அத்துடன், தொரபனை – ஊருபொக்க வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










