பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று (11.04.2025) ராவல்பிண்டியில் இரவு 7 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த கிரிக்கெட் தொடரானது மே மாதம் 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் உள்ள 4 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
இது போட்டிக்கான சரியான சூழல் கிடையாது என்றாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தங்களது ரசிகர்களை கவரும் என நம்புவதாக போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










