இலங்கைக்குப் பயணிகள் விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் ஏயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இச் சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குவைத்தின் தேசிய விமான சேவைகள் ஞாயிறு, புதன், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படுகிறது.
இந் நிலையில், பயணிகளின் வசதி கருதி இலங்கைக்கான விமானங்களை மீண்டும் இயக்க தீர்மானித்துள்ளதாக குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










