ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் 07.10.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்தாவது இடைக்கால மதிப்பாய்வின் கட்டத்தை முன்னிட்டு இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

பொருளாதார திவால்நிலையிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதற்கான ஒரு மூலோபாய திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குறித்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் ஒரு முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான இலக்கை அடைய, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் அழைப்பது அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects