நாட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், நவம்பர்  மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,541 ஆகும்.

அத்துடன், ரஷ்யாவிலிருற்து 8,220 சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,515 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,093 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர்  மாதம் 09  ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 577 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அறிய இணைப்பை அழுத்தவும்…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects