இலங்கையைத் தாக்கிய சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சமூகம் கூட்டுறவாகத் தமது சொந்த சம்பளத்திலிருந்து 3.6 மில்லியன் இலங்கை ரூபாவை தனிப்பட்ட நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை, குடியரசுக் கட்டிடத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இராஜதந்திரத் தூதுவர்களின் தலைவரான இந்தோனேசியத் தூதுவர் தேவி குஸ்டினா டோபிங்கால் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நன்கொடையைக் கையளிக்கும் நிகழ்வில், கொரியக் குடியரசு, சுவிட்சர்லாந்து, மாலைதீவு, பாலஸ்தீன், ஓமான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.
இந்தச் சவாலான நேரத்தில் இராஜதந்திரிகள் காட்டிய ஒற்றுமையை அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டினார்.
“எங்கள் மக்கள் பலர் சிரமப்படும் நேரத்தில், இராஜதந்திர சமூகத்தின் இந்தக் கூட்டுத் தனிப்பட்ட ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற தூதுவர்களில், கொரியத் தூதுவர் லீ மியோன், சுவிஸ் தூதுவர் கலாநிதி. சிரி வால்ட், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், பாலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.ஆ.கலீல், ஓமானின் பொறுப்பாளர் சயீத் அல் ஹர்பி மற்றும் இத்தாலியின் துணைத் தூதுவர் ஆல்பர்ட்டோ ஆர்சிடியாகோனோ ஆகியோர் அடங்குவர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










