2025ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மொத்த வரி வருமானத்தின் 40 சதவீதத்தை வருமான வரி, செல்வ மற்றும் ஆதன வரிகள் மூலம் ஈட்டிக்கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
தற்போது இதன் அளவு மொத்த வரியில் 30 சதவீதமாக உள்ளது.
வரி அறவீட்டு வலையை விரிவாக்குதல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் ஊடாக இதனைச் சாத்தியப்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிக வருமானம் ஈட்டுகின்ற மற்றும் சொத்து பொறுப்பு உடைமையாளர்களுள் வரிசெலுத்தும் இயலுமை அதிகமுள்ளவர்களிடம் நேரடி வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










