உடுதும்பர கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் (20.01.2025) தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த வீதியை இரவு நேரங்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என கருதி நேற்று (20.01.2025) மாலை 6 மணி முதல் கண்டி தென்னக்கும்புர சந்தி மற்றும் ஹசலக பாலத்திற்கு அருகில் 12 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










