நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது.
வறண்ட காலநிலையினால் நீர் மூலங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வரும் அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக நுகர்வோரிடையே நீரின் பாவனையும் அதிகரித்துள்ளது.
எனவே , நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக வாகனங்களைக் கழுவுதல் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை என்பவற்றுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து , அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










