வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு , சேலம் ஆர்.ஆர். புரியாணி நிறுவனத்தின் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (04.03.2025) இடம்பெற்றது.
இச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் வர்த்தக தொழில்துறை மேம்பாடு தொடர்பிலும் , சுற்றுலாத்துறையை வடக்கில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும், வடக்கில் தமது தொழில்முயற்சியை முன்னெடுப்பதிலுள்ள நடைமுறைச்சவால்கள் தொடர்பாகவும் ஆளுநருக்கு , சேலம் ஆர்.ஆர். புரியாணி நிறுவனத்தின் தலைவர் எடுத்துக்கூறினார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










