3 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Tamil
 – 
ta

3 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 03.04.2025 அன்று கலந்துகொண்டார்.

இதேவேளை, பிம்ஸ்டெக் 6 ஆவது உச்சிமாநாடு தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இன்று (04.04.2025) ஆரம்பமாகியதுடன்,  அதில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 03.04.2025 அன்று தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த ஆண்டு பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் கருப்பொருள், “சுபீட்சம், மீளாற்றல் மற்றும் திறந்த தன்மை” என்பதாகும்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects