தேர்தல் விடுமுறை குறித்து வெளியான அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.

தனியார் துறைகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த விடுமுறைகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குதல்.

தமது வாக்கை அளிப்பதற்காக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில்தருநர்கள் நடவடிக்கையெடுத்தல் வேண்டுமென உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 84அ(1) ஆம் பிரிவின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 2025.05.06 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் அதனை உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

2. அரச பிரிவின் அலுவலர்களின் விசேட விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12.3 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்காக ஆகக் குறைந்தது இரண்டு மணித்தியால காலமொன்று வாக்களிக்கச் செல்வதற்குத் தேவைப்படுமெனக் கருதக்கூடிய தொடர்ச்சியான காலப்பகுதியொன்றுக்கு சம்பள இழப்பற்ற விசேட விடுமுறை வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. தனியார் துறைகளில் விசேட விடுமுறை வழங்கும் விதிமுறையொன்றை பெரும்பாலான தொழில்தருநர்கள் தனது தொழிலாளர்களுக்கு வாக்களிக்கச் செல்ல அனுமதி வழங்குவதில்லையென கடந்த கால பல தேர்தல்களின் போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு தேர்தலொன்றின் போது வாக்களிப்பதற்காக செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் விடுமுறை வழங்குவதற்காக தூரம் மற்றும் காலம் ஆகியனவற்றுக்கிடையில் தொடர்புபடுத்தலொன்றைத் தயாரிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குரியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட ஆணையாளர்கள்/ அதன் அலுவலர்கள், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர், தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் அதன் அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் அலுவலர்கள் ஒன்று கூடி அது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதன் பின்னர் கீழ்காணும் அட்டவணைக்கு இசைவாக தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்க தொழில்தருநர்கள் நடவடிக்கையெடுத்தல் பொருத்தமாகுமெனத் தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

வாக்களிப்பதற்காக கடமை நிலையத்திலிருந்து தனது வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ள தூரத்தின் அளவு    –    வழங்க வேண்டிய ஆகக் குறைந்த விடுமுறைக் காலம்

கி.மீ. 40 அல்லது அதற்குக் குறைவாயின்              – அரை நாள் (1/2)
கி.மீ 40 க்கும் 100 க்கும் இடைப்பட்டதெனில்        – ஒரு நாள் (1)
கி.மீ 100 க்கும் 150 க்கும் இடைப்பட்டதெனில்      – 11/2 நாட்கள்
கி.மீ 150 க்கு அதிகமாயின்                                         – 2 நாட்கள்


இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects