பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 28.07.2025 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மூன்று அமைதியான முறையில் நடந்த தேர்தல்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும், அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நெதர்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் எனவும் தூதுவர் இங்கு வலியுறுத்தினார்.

நெதர்லாந்து தூதுவராக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்திலும் நெதர்லாந்தின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக செயற்படுமாறும், எதிர்காலப் பணிகளுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் திரு. நாமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் உதவிப் பணிப்பாளர் செல்வி. திவங்கா அத்துரலிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects