2024 ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சைகளின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களும், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களும், 07.08.2025 அன்று முதல் இம் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










