வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு 11.09.2025 அன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அமர்வின் போதே குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.
குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவகங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










