உலக அளவில் தற்போது (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதன் அடிப்படையில், அனைவரிடம் நவீன கையடக்க தொலைபேசி இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் ஐநா நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் பெண்களில் 28% பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










