இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில், 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனவும், அதன் எண்ணிக்கை 14,221 எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, இதே காலகட்டத்தில் சீனா, பிரித்தானியா, ஜெர்மனி, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,772,362 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










