வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு சர்வோதயம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணத்தின் ஏற்பாட்டில் 08.12.2025 அன்று நடைபெற்றது.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மேலும் இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 68 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வைத்ததுடன், குறித்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects