டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd நிறுவனமானது 100 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை Indra Traders (Pvt) Ltd நிறுவன ஸ்தாபகர்/தலைவர் இந்திரா சில்வா, 17.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
Indra Traders (Pvt) Ltd நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ருஷங்க சில்வா, ஹசீந்திர சில்வா மற்றும் பொது முகாமையாளர் சசினி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










