‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 45 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.
மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் 96க்கு முந்தைய குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்புகள் இதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளன.
இதற்கான காசோலையை மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் ரேமன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் கையளித்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் டி.ஜி. விமலரத்ன, உப தலைவர் ஜே.பி. திலகரத்ன உள்ளிட்ட மாவட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










