இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை 20.04.20026 அன்று வௌியிடப்பட்டது அந்த அறிக்கையின் அடிப்படையில்,
இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத் தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.
அதேபோன்று, ஒவ்வொரு 100 பேருக்குமான நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை 12.1 ஆகக் காணப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் விரிவடைந்து வருவதையே இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










