காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதியில் கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டராக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கொழும்பில் இருந்து காலி மாத்தறை ஊடாக பொத்துவில் வரை காணப்படும் கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில் கடல் அலைகள் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்திற்கு எழும் சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் காணப்படும் கரையோர பகுதிகளுக்குள் கடல் நீர் பிரவேசிக்கும் இயலுமை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வாழும் மக்களும் மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









