அமெரிக்க பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் எலன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவில் பல அண்மைய நேர்மறையான முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
அத்துடன், மக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் புலம்பெயர் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










