சபரகமுவ மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு 23.12.2024 அன்று நடைபெற்றது .
குறித்த நிகழ்வானது சபரகமுவ மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தன, நாடாளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான சாந்த பத்மகுமார மற்றும் சுனில் ராஜபக்ஷ ஆகியோர்களால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










