கொழும்பு பங்குச் சந்தை 23.01.2025 அன்று மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 17,000 புள்ளிகளைத் தாண்டியது.
இதற்கிடையில், இன்றைய (23) மதியம் 12.55 மணி வரையில் வர்த்தக பரிவர்தனையின் போது, அதன் பெறுமதி 17,003.79 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதன்போது, பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.76 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










