சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, வரி கொள்கை, வரி வருவாயைத் திறம்பட நிர்வகிப்பது மற்றும் அரசுத்துறையின் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, பிரதான பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










