தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

Tamil
 – 
ta

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி புகையிரதத் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (09.04.2025) முதல் இம் மாதம் 21 ஆம் திகதி வரை ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, புத்தாண்டு காலத்தில் கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி உள்ளிட்ட 05 முக்கிய வழிகளை மையமாகக்கொண்டு நீண்டதூர பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், வழமையான புகையிரத சேவைகளுக்கு மேலதிகமாக, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலிருந்து சுமார் 8 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects