முதல் நாளில்  அதிக வருமானத்தை ஈட்டியுள்ள “கலிப்சோ” புகையிரத சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ” புகையிரத சேவையின் முதல் நாளில்  720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இப் புகையிரதம் தனது முதல் சேவையை 08.04.205 அன்று காலை நானுஓயாவிலிருந்து தெமோதரை ரயில் நிலையத்துக்கு  ஆரம்பித்தது.

இதன்போது, 172  இருக்கைகள் வெறுமையாக  இருந்ததோடு, 72  பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 153,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருக்கும்.

கலிப்சோ ரயில், வழித்தடத்தில் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் விசேடமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி காட்சிக்கூடங்கள்,  உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வசதிகளைக் கொண்டுள்ளது. 

பயணத்தின் விசேட அம்சமாக சுற்றுலாப் பயணிகள்  உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலத்தை பார்வையிட நிறுத்தப்படும். 

அத்தோடு, இப் புகையிரதம் பல சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்லும்.

மேலும் இப் புகையிரதப் பயணமானது 4 1/2 மணித்தியாலங்களை கொண்டமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம்அறவிடப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects