தற்போதைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒரு அங்கத்தவர் போல் மாறிவிட்டது. நாய், பூனை ஆகியன உரிமையாளரின் வீட்டுக்குள் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கும் என்பதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், பூனைகளைப் பொறுத்தவரையில் அவை வெள்ளரிக்காயைக் கண்டால் மட்டும் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றன.
நம்மில் பல பேருக்கு எதனால் வெள்ளரிக்காய்களைக் கண்டால் பூனைகள் இப்படி பயப்படுகின்றன என்பது குறித்து தெரியாமல் இருக்கும்.
அதுகுறித்த சுவாரஷ்ய தகவல்களைப் பார்ப்போம்.
பெரும்பாலும் பூனைகள் தனியாக வாழவே விரும்பும். தனியாக வாழும் பூனைகள் மிகுந்த கவனத்துடன் இருக்கும். இதனால் அதிக சுறுசுறுப்பாகவும் சூழலில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கும்.
அப்படிப்பட்ட பூனைகள் வெள்ளரிக்காயைப் பார்த்தால் மட்டும் அலறியடித்து ஓடுகின்றன. காரணம், வெள்ளரிக்காய் பார்ப்பதற்கு பாம்புகளைப் போல் பூனையின் கண்களுக்கு தோன்றுமாம்.
பாம்புகள் மேல் இருக்கும் இயற்கையான பயம் காரணமாக வெள்ளரிக்காயை பூனைகள் விரும்புவதில்லை.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










