ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று (12.05.2025) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பல் மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.05.205 அன்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கப்பலில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சுற்றுலாப் பயணிகள் இன்று கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல உள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










