நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கை பெறுவது கட்டாயம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 100 கிலோமீற்றருக்கு அதிக தூரம் பயணம் செய்யும் அனைத்து பேருந்துகளும் இந்த அறிக்கையைப் பெற வேண்டும். 

பொறியியல் அறிக்கையைப் பெறுவது ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க 21.05.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

இதேவேளை, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட, ஜூலை முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளில் பொருத்தப்படும் மேலதிக சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects