கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 29.05.2025 அன்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்தாக தெரிவிக்கப்படுகிறது
அத்தோடு, கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், வீடுகளில் வசித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










