போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக 42 வயதான கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அங்கு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரகாரம், அவர் 50.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் 01.06.2025 அன்றைய தினம் நிறைவடைந்தன.
வாக்கெண்ணும் பணிகள் இன்று (02.06.2025) காலை நிறைவடைந்த நிலையில், போலாந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










