18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது. 

இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று இவ்வாறு கிண்ணத்தை   கைப்பற்றியுள்ளது. 

அகமதாபாத்தில் 03.06.2025 அன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. 

அந்த அணி சார்பில் ஷஷாங்க் சிங் (Shashank Singh) ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) மற்றும் க்ருணால் பாண்டியா (Krunal Pandya) தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects