காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நேர விரயம் மற்றும் வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இணையவழி நேர முன்பதிவு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் இணையவழி நேர முன்பதிவு செயலி அங்குரார்பண நிகழ்வு 11.08.2025 அன்று பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இணையவழி நேர முன்பதிவு செயலியை காண இங்கே கிளிக் செய்யவும்…..







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










