இலங்கை கடற்படையின் 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை கடற்படையின் 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐம்பத்தாறு (56) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும், மூன்று (03) பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகள் உட்பட ஐம்பத்தொன்பது (59) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 12.08.2025 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், இலங்கை நிரந்தர கடற்படையின் நிர்வாக, பொறியியல், விநியோகம், மின்சாரம் மற்றும் மின்னியல் மற்றும் ஒழுக்காற்று பிரிவுகளுக்கு 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐம்பத்தாறு (56) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும், 2024 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மருத்துவ, பல் மருத்துவ மற்றும் பொறியியல் பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று (03) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும் கடற்படைத் தளபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி,

கிட்டத்தட்ட தொள்ளாயிரம் (900) விண்ணப்பதாரர்களில் கடற்படையில் சேரத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பத்தொன்பது (59) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பேசிய கடற்படைத் தளபதி, மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையை நிகழ்த்தி, கடற்படையில் அவர்களின் எதிர்காலப் பயணம் குறித்து அவர்களுக்குத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தனித்துவமான பொறுப்பை விளக்கிய கடற்படைத் தளபதி, எதிர்காலத்தில் கடற்படையின் முன்னணி பயிற்சி நிறுவனங்களால் அந்த பொறுப்பை தாய்நாட்டிற்கு திறமையாகவும் திறம்படவும் நிறைவேற்ற தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைக்கும் பயிற்சி வாய்ப்புகள் மூலம் தொழில்முறை திறனை அடைவதன் மூலம் பயிற்சிக் காலத்தில் ஏற்படத்தக்க சவாலை வெற்றி கொள்ள அவர்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தங்கள் இளம் மகன்கள் மற்றும் மகள்களை கடற்படையில் சேர ஊக்குவித்த மாணவச் சிப்பாய் அதிகாரிகளின் பெற்றோருக்கும் கடற்படைத் தளபதி நன்றிகளை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கடற்படயின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன மற்றும் பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன உள்ளிட்ட இயக்குநர் ஜெனரல்கள், கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects