பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடு தழுவிய ரீதியில் இன்று (25.08.2025) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது. 

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25.08.2025) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட முன்னதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 7 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள் இன்று (25.08.2025) முதல் வழமையான பணிகளுக்கு திரும்புகின்றனர் இந் நிலையில், பணிப்புறக்கணிப்பால் குவிந்திருந்த தபால் பொதிகளை விநியோகிக்கும் பணி 24.08.2025 அன்று நள்ளிரவு முதல் தொடங்கிய தாபால் மா அதிபர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects