இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்த தொடர், 20க்கு 20 வடிவத்தில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இந்தநிலையில் ஆசியக் கிரிக்கெட் பேரவையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அத்துடன் 2024 ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஆண்கள் ப்ரீமியர் கோப்பையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன் மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகளும் இந்த தொடரில் பங்குபற்றுகின்றன.
இதனடிப்படையில் இன்று, ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
2025 ஆண்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது பதிப்பு இன்று ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்த தொடர், 20க்கு 20 வடிவத்தில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இந்தநிலையில் ஆசியக் கிரிக்கெட் பேரவையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அத்துடன் 2024 ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஆண்கள் ப்ரீமியர் கோப்பையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன் மற்றும் ஹொங்காங் ஆகிய அணிகளும் இந்த தொடரில் பங்குபற்றுகின்றன.
இதனடிப்படையில் இன்று, ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










