2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், வாய்மூல கருத்துகளுக்காக 9 மாகாணங்களை உள்ளடக்கிய 9 பொது ஆலோசனைகள் நடத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாய்மூல கருத்து அமர்வுகள் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பொது மக்களின் எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் கருத்துகளையும் பின்வரும் வழிகள் மூலம் 2025 அக்டோபர் மாதம் 07ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கலாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின்னஞ்சல் – mailto:info@pucsl.gov.lk
வட்ஸ்அப் – 076 427 1030
ஃபேஸ்புக் – www.facebook.com/pucsl
தபால் – மூன்றாவது மின்சார கட்டணம் குறித்த பொது மக்கள் ஆலோசனை 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு
6வது மாடி, இலங்கை வங்கி வணிக கோபுரம், கொழும்பு 3
ஆலோசனை அறிக்கை மற்றும் முன்மொழிவை பின்வரும் இணைப்பில் காணலாம். https://www.pucsl.gov.lk/proposed-electricity-tariff-revision-2025-sept/


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










