கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் 2025.09.09 ஆம் திகதி உடைய 27/2025 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2025 கல்வி வருடத்தில் தேசிய பாடசாலைகளின் இடை நிலைத் தரங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

குறித்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் 27/2025 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களைப் பூரணப்படுத்தி 2025.09.26 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மேலதிக ஆவணங்கள் சகிதம் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects