புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய இலக்கத் தகடுகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் குறிப்பிட முடியாதுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கொள்முதல் தொடர்பான மேல்முறையீடு முடிந்ததும் இலக்கத் தகடுகள் வழங்கல் விரைவில் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்த முடியாது என்பதால், இலக்கத் தகடுகளுக்கு பதிலாக, ஸ்டிக்கர்கள் போன்ற பிற முறைகள் மூலம் எண்களைக் காண்பிக்கவும், வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கவும் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










