இலங்கையில் சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து வெளியான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

12 வயதுக்குட்பட்ட எந்தவொரு சிறுவரும் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதிகமான திரை நேரம் (Screen time) மற்றும் தீங்கான இணைய உள்ளடக்கங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் சமூக தொடர்பாடலையும் ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects