அடுத்த சில ஆண்டுகளில் கனடாவிற்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு மத்திய அரசாங்கம் கணிசமாகக் குறைத்து வருகிறது.
அடுத்த ஆண்டு 385,000 தற்காலிக குடியிருப்பாளர்களை மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
குடியேற்றத்தை “இன்னும் நிலையான நிலைகளுக்கு” கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்நாட்டு நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச மாணவர் வருகையில் 60 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2024 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு புகலிடக் கோரிக்கைகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அடுத்த மூன்று ஆண்டுகளில் 380,000 புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










