சுமார் 3,469 இளைஞர்களுக்கு E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென்கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே, கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி பெற்ற 77 இளைஞர்கள் அண்மையில் தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
தென்கொரியாவில் உற்பத்தி கட்டுமானம், கடற்றொழில் சேவைகள் மற்றும் விவசாயத்துறைகளில் E-9 விசா பிரிவின் கீழ் குறித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










