கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர தபால் புகையிரத சேவை (20.11.2025) இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக மார்க்கத்தில் உள்ள ஊவா மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இன்றும் அப் பாதையில் புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே இயக்கப்படுவதாகத் புகையிரதத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவம் கொழும்பிலிருந்து நானுஓயா வரையிலும், பதுளையில் இருந்து பண்டாரவளை வரையிலும் செல்லும் சேவைகளைப் பாதித்துள்ளது. மண்சரிவால் பாதையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பின்வரும் வகையில் புகையிரத சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குச் செல்ல வேண்டிய புகையிரதங்கள், நானுஓயா வரை திருப்பி விடப்பட்டுள்ளன.
பதுளையில் இருந்து கொழும்புக்குச் செல்ல வேண்டிய தொடருந்துகள், நானுஓயா வழியாகக் கொழும்பு கோட்டையை வந்தடையும்.
மண்சரிவால் ஏற்பட்ட குப்பைகளை புகையிரத ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகளில் இடையூறு நீடிப்பதால், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










