புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் அளவிடப்பட்ட ஒட்டுமொத்தப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்) 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக உயர்ந்துள்ளது.
இது இதற்கு முந்தைய மாதமான 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பதிவான 2.1% உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
ஆண்டுக் கணக்கீட்டின் அடிப்படையிலான மொத்தப் பணவீக்க வீதமானது, நாட்டின் பொருளாதாரத்தில் விலையேற்றம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, உணவுப் பணவீக்க வீதமும் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 4.1% ஆக அதிகரித்துள்ளது.
இது செப்டெம்பர் மாதத்தில் பதிவான 3.8% உடன் ஒப்பிடும்போது உயர்ந்த சதவீதமாகும்.
உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










