டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டுள்ள நுவரெலியா – ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாக மீள திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயத்தை கருத்தில் கொண்டு, அப்பகுதியின் நிலம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் இதன் போது உறுதியளித்தார்.
அதற்கமைய, ஹக்கல தாவரவியல் பூங்கா இன்னும் சில நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










