டித்வா அனர்த்த நிவாரணப் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு புதிய பதிவுத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் விபரங்களை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் பகிரப்படும் அனைத்துத் தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் அதேவேளை, தவறான தகவல்களை அளிப்பது அரசாங்க உதவியைப் பெறுவதற்கான தகுதியை இரத்து செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மிகவும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவிகளை விரைவாகக் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட்டுள்ள ஆங்கிலப் படிவத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்👈

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects