டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான Rebuilding Sri Lanka நிதியத்திற்கு மலையக மக்களால் 10 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவர் 24.12.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலையை கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









