‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் இன்று (23.02.2026) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த ரயில் இன்று (23.02.2026) இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த புகையிரதம், ஆசன முன்பதிவு வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டியொன்றையும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இரண்டு பெட்டிகளையும் கொண்டுள்ளது.
இந்த புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யது கொள்வதற்கு https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகவும், புகையிரத நிலையங்களுக்கு நேரில் சென்றும் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










